Description
நீங்கள் பரலோகம் செல்வீர்களா?
நீங்கள் பரலோகத்தின் வாசலில் காத்துக்கொண்டிருக்கிறீர்கள், உங்களிடம், “நாங்கள் ஏன் உன்னை உள்ளே அனுமதிக்க வேண்டும்?” என்ற கேள்வி கேட்கப்படுகிறது.
நீங்கள் என்ன சொல்வீர்கள்?
“நடு சிலுவையில் இருந்த மனிதர்” புத்தகம், இயேசுவைச் சந்தித்தபோது தங்கள் வாழ்க்கை மாறப்பெற்ற மூன்று நபர்களை அறிமுகப்படுத்துகிறது. ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை, மறுவாழ்வு மற்றும் கடவுளிடம் திரும்பிச் செல்வதற்கான வழி கொடுக்கப்பட்டது.
நடு சிலுவையில் இருந்த மனிதரான இயேசுவிடம் வருகிற அனைவருக்கும் இந்த வாய்ப்பு எப்படிக் கிடைக்கும் என்பதைத் தமக்கே உரியத் தெளிவுடன் அலிஸ்டர் பெக் விளக்குகிறார்.
அலிஸ்டர் பெக், உலகளாவிய வானொலி மற்றும் டிஜிட்டல் ஊழியமான ‘ட்ரூத் ஃபார் லைஃப்’-ல் வேதாகம ஆசிரியராக இருக்கிறார். இவர் ஓஹியோவின் கிளீவ்லேண்டில் உள்ள பார்க்சைட் திருச்சபையில் (Parkside Church) நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமைப் போதகராகப் பணியாற்றியவர்.









Reviews
There are no reviews yet.